வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க 24 மணி நேர சுழற்சி முறையில் 5 அடுக்கு பாதுகாப்பு:-

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர்
கல்லூரியின் காப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை‌ பாதுகாக்க
ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எல்லை பாதுகாப்பு இராணுவ படை வீரர்கள் (BSF), தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் ஆகியோர்களை நியமித்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனமாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப.,அவர்கள் உத்தரவிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *