மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது….

நாளை மதுரை புறப்படுகிறார் அழகர்

மதுரை அருகே, அழகர்கோவிலில் (உள்ள கள்ளழகர் கோயிலில் நேற்று மாலை காப்புக்கட்டு தலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. நாளை மதுரைக்கு புறப்ப டும் கள்ளழகர் ஏப்.23ம் தேதி வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திரு விழா கடந்த 12ம் தேதி தொடங்கி 8வது நாளாக நடந்து வருகிறது.

இதனிடையே, மதுரை அருகே, அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று மாலை 5.30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி யது. அதன்பின் தோளுக் கினியான் பல்லக்கில் கோயில் திருக் கல்யாண மண்டபத் தில் அழகர் எழுந்தருளினார். இன்றும் இதே நிகழ்வு நடைபெறும்.


ஏப்ரல் 23ம் தேதி வைகையாற்றில் எழுந்தருள்கிறார். அதற்குமுன்பு அழகர் வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். ஏப்ரல் 22ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும். அன்று இரவு 8 மணி 8 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் முடிந்து, இரவு 11 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்க புறப்படுகிறார்.

ஏப்ரல் 23ம் தேதி காலை 6.10 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அன்று இரவு 9 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு கள்ளழகர் காட்சி அளிக்கிறார். ஏப்ரல் 24ம் தேதி 11 மணிக்கு வண்டியூர் வீரராக வப் பெருமாள் கோயிலில் எழுந்தருளிய பின், மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.

அங்கு இரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் 25ம் தேதி காலை 6 மணிக்கு மோகினிஅவதாரத்தில் காட்சியளிக் கும் கள்ளழகர், இரவு 11 மணியளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்ட பத்தில் கள்ளர் திருக்கோ லத்தில், பூப்பல்லக்கில்தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் முன்பு வையாளியானவுடன் மலைக்கு திரும்புகிறார் . ஏப்ரல் 26ம் தேதி மூன்று மாவடி, பொய்கை கரைப்பட்டி, அப்பன் திருப்பதி வழியாக சென்று ஏப்ரல் 27ம் தேதி 11 மணிக்கு கள்ளழகர் இருப்பிடம் வந்து சேர்கிறார்.

ஏப்ரல் 28ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடு களை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் வரை 483 மண்ட கப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *