பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு குட்டையின் அவல நிலை! புதர்கள் மண்டி, கசிவு நீர் மதகு பழுதடைந்து உள்ளது. இதனால் குட்டைக்கு வரும் தண்ணீர் சேமிக்க முடியாமல் வெளியேறி விடுகிறது! குட்டையை ஆழப்படுத்தி மதகை பழுது நீக்கி கொடுத்து கரை சுற்றிலும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வேண்டும் என்பதுஇந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.அரசு தலையிடுமா?