அரசு மருத்துவமனை முதல்வர் பாராட்டு
மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் ரேடியாலஜி துறை உதவி பேராசிரியர் செந்தில்குமாரது கண்டுபிடிப்பான, கதிரியக்க சிகிச்சையை துல்லியமாக அளிக்க உதவும் “புளோரசன்ஸ் மார்க்கருக்கு” இந்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து, உதவி பேராசிரியரை, அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் பாராட்டினார்.’
இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், “புற்றுநோயை குணப்ப டுத்துவதில் கதிரியக்க சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, கதிரியக்க சிகிச்சையானது, தொடர்ந்து 30 முதல் 35 நாட்கள் வரை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய புற்றுநோய் குணமடை யும்.
இந்த கதிரியக்க சிகிச்சையை, 30 நாட்களுக்கு நாட்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு ஒரே இடத்தில் மிகவும் துல்லியமாக சிகிச்சை வழங்க வேண்டும்.
அப்போதுதான் அவருடைய புற்றுநோய் குணமடையும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புளோரசன்ஸ்சால் உருவாக்கப்பட்ட மார்க்கரை பயன்படுத்தி கதிரியக்க சிகிச்சை அளிக்க முடியும். அதற்கு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கி உள்ளது” என்றார்.