வேடசந்தூர் அருகே பிறந்த குழந்தையை கொன்று முள் புதரில் வீசிய தாய் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த கன்னியம்மாள் (42). இவருக்கு குழந்தைகள் உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்தார். குழந்தைகளை கவனித்து வந்த பெண் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். இரு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பூதிபுரத்திற்கு வந்தார்.

இந்நிலையில் பூதிபுரம்- சீத்தப்பட்டி ரோட்டில் பிறந்த பெண் குழந்தை ஒன்று தெரு நாய்கள் கடித்த நிலையில் இறந்து கிடந்தது. போலீசார் விசாரணையில், குழந்தையை பெற்றெடுத்து முட்புதரில் வீசியது கன்னியம்மாள் என்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கூம்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *