நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சுமார் 50 டன் எடை கொண்ட கிரானைட் கல் ஏற்றிச் சென்ற லாரியின் மீது அரசு பேருந்து கார் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் உள்ளிட்ட சிலர் படுகாயம்.

மேலும் பேருந்தில் வந்த 10 க்கும் மேற்பட்ட பயணிகள், ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து உசிலம்பட்டிக்கு காரில் சென்ற இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் என 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்டு பரமத்திவேலூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் விசாரணை.

   நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்  அருகே பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சுமார் 50 டன் எடை கொண்ட கல்லை ஏற்றி ஏற்றுக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது அதன் பின்னால் சேலத்திலிருந்து நாற்பது பயணிகளுடன்  மதுரை நோக்கிச் சென்ற இடை நில்லா விரைவு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற லாரியின் பின்னால்  மோதியது. 

பேருந்தை தொடர்ந்து ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மதுரை அடுத்துள்ள உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்த  கார் பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட பேருந்தில் இருந்த  பயணிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் 
இதில் பேருந்து ஓட்டுனர் நடத்தினர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கால்கள்,மண்டை உடைந்து படுகாயம் அடைந்த நிலையில் அனைவரும்108, தனியார் ஆம்புலன்ஸ்

மூலம் மீட்கப்பட்டு பரமத்திவேலூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காரில் பயணித்த பாண்டியன் குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேரும் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிநது சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *