கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது

புவனகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் கூட்டாக அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர் பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்

மேலும் தொழுகை முடிந்து வெளியில் வந்த இஸ்லாமியர்களுக்கு புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது இதனை எடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *