புவனகிரி கடைவீதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது

கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் உள்ள ஆர்ய வைஸ்ய பஜனை மட வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மூன்று காலம் யாகத்தில் பல்வேறு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமான கலசத்தின் மீது வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கபட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *