தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஒரே இரவில் இரண்டு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் இராணுவ வீரர் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சுகத்தை ஏற்படுத்தி உள்ளது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே உள்ள பிள்ளையார் குளம் அக்ரஹார தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பாஸ்கரன் (வயது 33) இவர் ராணுவ வீரர் இவருடைய உறவினர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரது மகன் கிருஷ்ணராஜா (வயது 32) தற்போது விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
பாஸ்கரன் தனது மைத்துனர் சேத்துரைச் சார்ந்த மாரிமுத்து (வயது 25 ) மற்றும் கிருஷ்ணராஜா ஆகியோருடன் ஒரு காரில் குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலையில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணராஜா ஓட்டியுள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரி பகுதிகளில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள தென்னை மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பாஸ்கரன், கிருஷ்ணராஜா ஆகியோர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி என் நிலையில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்தில் பலியான இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரயோத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இறந்த ராணுவ வீரர் பாஸ்கரன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். 2 மாத விடுமுறைக்கு ஊருக்கு வந்த இவர் நாளை மறுநாள் மீண்டும் பணிக்கு திரும்பிச் செல்ல இருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்ணராஜாவுக்கு கனகலட்சுமி என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
அதே இரவில் சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவரது மனைவி ஹேமலதா (வயது 60) அவரது மகன் மாதவன் (வயது 29) அதே பகுதியைச் சார்ந்த தங்கராஜன் (வயது 35) அவரது மனைவி பூங்கொடி (வயது 30) இவர்களது மகன்கள் வெற்றிச்செல்வன் (வயது7) போதித்தன் (வயது 5)வெங்கடேசன் மனைவி சசிகலா (வயது 48) மகள்கள் காவியா (வயது 24) மோனிஷா (வயது 23) ஆகிய 9 பேர்களும் ஒரு காரில் குற்றாலம் வந்துள்ளனர்.அவர்கள் குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னைக்கு புறப்பட்டு உள்ளனர் காரை மாதவன் ஒட்டியுள்ளார்
புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பகுதியில் கார் வந்தபோது எதிரே வந்த ஒரு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதி உள்ளது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது லாரியின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஒன்பது பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி சேர்ந்த குருசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.