தாராபுரம் செய்தியாளர் பிரபு
தாராபுரத்தில், சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ மனை கட்டிட பணியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டம்,
தாராபுரத்தில், அரசு மருத்துவ மனைக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தாராபுரம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்ய நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கட்டுமான பனியில் ஈடுபட்டுவரும் பொறியாளரிடம், கட்டிடம் உறுதியாகவும், கூடிய விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்சியில், ,தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், அரசு மருத்துவர் பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வராஜ் , உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கலந்து கொண்டனர்.