அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் தங்கராஜ், முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வட்டார தலைவர் ராமதாஸ், சங்க முன்னாள் தலைவர் நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் ரகுபதி வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.

தொடர்ந்து அலங்காநல்லூர் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சங்கத்தின் புதிய தலைவராக கண்ணன், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக கார்த்திக் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் அரிமா சங்க நிர்வாகிகள் அப்பாஸ், தயாளன், மனோகரவேல் பாண்டியன், கோவிந்தராஜ், பிரபாகரன், முரளிதரன், இருளாண்டி, தனுஷ்கோடி, ஜெயராமன், குமார் நாராயணன், கிருஷ்ணமூர்த்தி, ஏபெல் ஆண்டனி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *