தஞ்சாவூர் :தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகம், பிரிஸ்ட் நிகர்நிலை பல்கலைகழகம் ஆகிய இணைந்து நடத்தும் மாபெரும் மூன்றாவது மாநில அளவிலான அஷ்டடோ அகடா போட்டி பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகத்தின் மாநில தலைவர் பி பி.செந்தில்நாதன் ,மாநில பொதுச் செயலாளர் எஸ் புவனேஸ்வரி,ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

தொடர்ந்து மதிமுக துணை பொதுச்செயலாளரும் மஞ்சூரியா குங்ஃபூ இன்டர்னேஷனல் இன் தலைவருமான மல்லை சி. ஏ. சத்யா, தஞ்சை மாநகரத் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி , பிரிஸ்ட் பல்கலைகழக ரிஜிஸ்டர் டாக்டர் ,அப்துல் , வல்லம் ரியாஸ் ரிஸ்வான் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி போட்டியினை துவக்கி வைத்தனர்.

இப் போட்டியினை உட்பிரிவு போட்டிகளை உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளரும் ஒருங்கினைப்பாளரும். Rtn. .பி டி ஆர் ராஜா சுரேஷ் ,டி என் பி இ டி &பிடிஏ மாநில பொருளாளர்
எஸ் எம் ஜெயினுல் ஆபிதீன்,எஸ் . அபுசாலி,ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் 22 மாவட்டங்களில் இருந்து சுமார் 1200 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப் போட்டியானது சிவகலா, ஹஸ்தகலா, மருதாணிகலா, பாலசந்துளான் என்ற நான்கு உட்பிரிவினை கொண்டு வயது மற்றும் எடை பிரிவின் அடிப்படையில் போட்டி நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *