எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் ஆடி மாத உற்சவம் பக்தர்கள் பால்குடம் அலகு காவடி, பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம் .அதன்படி இந்த ஆண்டு ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டி தொடங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனை இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள் சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து பால்குடங்கள், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.