அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தேசிய வேளாண் நிறுவனம் சென்னை அவர்கள் செய்து கொடுத்த வாழை கொள்முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக TNIAMP PHASE lV அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம்-511 வாழை தார்கள் ரூபாய்:1,20,000/- க்கு கொள்முதல் செய்து அருப்புகோட்டையில் இருக்கும் PS Traders நிறுவனத்திற்க்கு அனுப்பட்டது.

மதுரை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை துணை இயக்குநர் திருமதி. வி.மெர்சி ஜெயராணி வேளாண் வணிகம் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை கோட்டம் வேண்மை அலுவலர் திருமதி.க.மலர்விழி வேளாண் வணிகம் மற்றும் வேளாண் அலுவலர் திருமதி. லி.மீனா (உசிலம்பட்டி கோட்டம்), உதவி வேளாண் அலுவலர் திரு.சங்கர் கணேஷ் முன்னிலையில் அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு.தனி ராஜன், இயக்குநர்கள் திரு.ஆ.அனுமதிபாண்டி,திரு.க.தங்கராஜ் TNIAMP அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழையில் சந்தை வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தந்த சென்னை தேசிய வேளாண் நிறுவனத்தின் அணித்தலைவர் திரு. முருகானந்தவேல், திரு.அருள் குமார் மற்றும் திரு. முருகன், நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு.ராஜபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *