மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80வது பிறந்த நாள் விழாவையொட்டி அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மாவட்ட பொருளாளர் நூர் முகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காரணம் அம்பலம், திலகராஜ், ஒ.பி.சி. மாவட்ட தலைவர் முருகன், மகளிர் அணி மாவட்ட தலைவி செல்லப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெற்கு வட்டாரத் தலைவர் சுப்பாராயலு வரவேற்று பேசினார். வட்டாரத் தலைவர்கள் காந்தி, சிவானந்தம், சண்முகசுந்தரம், சீனிவாசன், நகர் தலைவர்கள் வைரமணி, சசிகுமார், முருகானந்தம், மகாதேவன், மாவட்ட பொது செயலாளர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனுஷ்கோடி, வழக்கறிஞர் சந்தானம், ராமமூர்த்தி, நிர்வாகிகள் தர்மர், திரவியம், மலைராஜன், பேரூராட்சி கவுன்சிலர் தனலட்சுமி, நாட்டாமை பாஸ்கரன், செந்தில், கார்த்திக், மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத்தில்ராகுல் காந்தி அரசியல் செயல்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து வருகின்ற 22ஆம் தேதி சென்னையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் கண்டன் ஆர்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.