கேரளா மீன் இறைச்சி கழிவு நீரை கொட்டிய வாகனத்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் இறைச்சி கழிவுநீர் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டதை தடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான டிஎன்75 ஏஜெ1785 என்ற வாகனத்தில் கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் செயல்படும் எம்பிஎன் எனும் தனியார் மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கேரளா செல்ல வந்த
வாகனத்திலிருந்து கடும் தூர்நாற்றம் வீசிய மீன் கழிவு நீரை பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது இதனைக் கண்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாகனத்தை கோமங்கலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இப்பிரச்சனை சம்பந்தமாக கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது கேரளா மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் கொட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் கடுமையான தண்டனைகள் இருப்பதால் தமிழக எல்லையோர பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடை செய்து கழிவுகளை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.