ஆச்சி உணவு குழுமம் 2024ஆண்டில் 2200 கோடி அடுத்த ஆண்டு 3ஆயிரம் கோடி ஈட்டியுள்ளது ; தலைவர் ஏ டி பத்மசிங் ஐசக் தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பண்பாக்கம் ஊராட்சியில் ஆச்சி தொழிற்சாலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆச்சி தொழிற்சாலையின் செயல் இயக்குனர்கள் அஸ்வின் பாண்டியன்,அபிஷேக் ஆப்ரஹாம், சேர்மன் ஏ.டி.பத்மசிங் ஐசக், இயக்குனர் தில்மா ஐசக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
நிகழ்ச்சியில் ஆச்சி உணவு குழுமத்தின் தலைவர் ஏ டி பத்மசிங் ஐசக்
தெரிவித்ததாவது.
உணவு பொருட்கள் உற்பத்தி துறையில் கால் பதித்த கால் நூற்றாண்டுகளையே இந்தியா முழுவதிலும் கால் படாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேக தகுந்த வளர்ச்சியினை ஆட்சி உணவுக் குழுமம் பெற்று இருக்கிறது 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சர்வதேச சந்தையிலும் தனித்துவம் பெற்று திகழ்கிறது 220 வகையான தரம் நிறைந்த உணவுப் பொருட்களை தயார் செய்து 15 லட்சம் சிறு கடை கள் வழியாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் கைகளு க்கு எட்டும் தூரத்தில் ஆச்சி கொண்டு போய் சேர்கிறது, உள்நாட்டில் உற்பத்தித்திறனை உயர்த்தவும், ஏற்றுமதி பெருக்கவும், வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்தியாவில் 14 துறைக ளைச் சேர்ந்த தலைசிறந்த நிறுவ னங்களை தேர்வு செய்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி னார்கள். அதில் முக்கியத்துவம் வாய்ந்த உணவு பதப்படுத்தும் துறையில் ஆச்சி உணவுக் குழுமத்தை தேர்வு செய்தது, மகிழ்ச்சியான செய்தி ஆகும். மத்திய அரசு இந்த அற்புதமான திட்டத்தின் ஆச்சியும் இடம்பெற்ற தை மிகச்சிறந்த பெருமையாகவும் அங்கீகாரமாகவும் ஏற்றுக் கொள் கிறோம். இந்த வாய்ப்பினை அளி த்தமைக்கு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகத்துக்கும் திட்ட மேலாண்மை நிறுவனத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல முறையில் வழிகாட்டுதல்களை வழங்கி, ஒத்துழைப்பு நல்கும் தமிழக அரசு க்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் ஆச்சியின் செயல் இயக்குனர்கள் அஸ்வினி பாண்டியன், அபிஷேக் ஆபிரகாம், மற்றும் எங்கள் அனைத்து பணியாளர்களையும் மனதார பாராட்டுகிறேன்.கோவிட் 19க்கு பிந்தைய காலகட்டத்தில் இந்திய தொழில்துறை பெரும் பின்னடைவை சந்தித்தது இந்திய பொருளாதாரம் நெருக்கடிக்குள் ளானது. அந்த காலகட்டத்தில் தொலைநோக்கு பார்வைகொண்ட பி எல் ஐ திட்டத்தை இந்திய அரசு வகுத்தலித்தது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டும் வர அந்த திட்டம் நல்வாழி காட்டியதோடு எங்களைப் போன்ற உணவுப் பொருள் உற்பத்தி நிறுவ னங்களுக்கு மிகவும் பெரிய ஊக் கத்தொகையினை தந்தது. பி எல் ஐ திட்டத்தின் அடிப்படை கோட் பாடு அற்புதமானது. நாங்கள் கூடு தலாக பெரும்பாலும் பணத்தை முதலீடு செய்து உற்பத்தியை கணிசனமாக உயர்த்துக் காட்ட வேண்டும். எந்த அளவுக்கு நாங் கள் உற்பத்தியை பெருக்குகிறோ மோ அந்த அளவுக்கு எங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழ ங்கும் நாங்கள் இந்த திட்டத்தில் இணைந்ததில் இருந்து ஆண்டு க்கு ஆண்டு உற்பத்தியை பெரு க்கி அதிகமான ஊக்கத்தகையை மத்திய அரசிடம் இருந்து பெற்று வருகிறோம். சிறப்பாக செயல்பட் டுக் கொண்டிருக்கும் இந்த திட்ட த்திற்காக விழாவில் தான் மாண்பு மிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று வியாழக்கிழமை காணொளி வாயிலாக கலந்து கொள்கிறார். அதில் ஆச்சி நிறுவ னமும் பெருமையுடன் பங்கேற்கிற து எங்கள் உற்பத்தி திறன் அதிகரி த்து இருப்பதை விழாவில் உவகை யுடன் எடுத்துக்காட்டாக இருக்கி றோம் பிஎல்ஐ திட்டத்தில் ஆச்சி 84.66 கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறது அதில் எங்கள் தொழி ற்சாலையில் உள்கட்டமைப்பு சுமார் ₹45 கோடியில் மேம்படுத்தி உள்ளோம் நவீன இயந்திரங்க ளின் பயண்பாட்டு வகையில் ரூ 40 கோடியை முதலீடு செய்துள்ளோம் அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பண்பாக்கம் பகுதியில் அமைந்தி ருக்கும் எங்களது தொழிற்சாலை யில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி அளவுக்கு கட்டமைப்பினை உருவாக்கி உள்ளோம் அங்கு அதிநவீன முறையில் மிக சுகாதா ரமாக ஊறுகாய் மற்றும் ரெடி டூ குக் உணவு வகைகள் தயாரிக்கின் றன அங்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் மெட்ரிக் டன்னில் இருந்து உற்பத் தியை 6000 மெட்ரிக் டன்னாக உய ர்த்தி இருக்கிறோம் அதாவது உற் பத்தி இருமடனாக அதிகரித்துள் ளது. பண்பாக்கத்தில் மேலும் 50,000 சதுர அடியில் உள்கட்டமை ப்பை மேம்படுத்தி அதிநவீன மற் றும் மேம்படுத்தப்பட்ட முறையில் மிளகாய் அரவை செய்கிறோம். அங்கு ஆண்டுக்கு 9000 மெட்ரிக் டென் மிளகாய் அரைக்கப்படுகி றது திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்முதம்பேடு கும்மிடிப்பூண்டி அலமாதி கோலடி ஆகிய இடங்க ளில் உள்ள தொழிற்சாலைகளை யும் மேம்படுத்தி உள்ளோம். அங்கு சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பர ப்பளவில் ஆண்டுக்கு 11.280 மெட் ரிக் டன் அளவுக்கு மசாலா பொருட் களை அரவை செய்கிறோம் இந்த தொழிற்சாலைகளில் உள்ள அனைத்து துறைகளுமே அதி நவீன கட்டமைப்புகளோடு இயங்கு கின்றன 2023-24 ஆண்டில் ஆச்சி நிறுவனம் 2200கோடி ஈட்டியுள்ளது வரும் 2025ஆண்டில் 3ஆயிரம் கோடி என்ற விற்பனை இலக்கை எட்டி விடுவோம் என மேற்கண்ட தகவல்களை குழுமத்தின் தலை வர் ஏ டி பத்மசிங் ஐசக் தெரிவித் ததோடு மேலும் ஆச்சி நிறுவனத் தின் பல்வேறு சாதனைகளையும் விளக்கிக் கூறினார்.