வடசென்னை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்.

செங்குன்றம் செய்தியாளர்

தமிழகத்தில் உள்ள கிராம அலுவலர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே மற்றும் இணைய வழி பயிர் அளவீடு பணி தொடர்பாக உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கக்கோரி தமிழக முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் கருப்புபேட்ஜ் அணிந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி புழல் காந்தி சாலையில் உள்ள வடசென்னை கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு, வடசென்னை அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் மோகனரங்கம் தலைமையில் மாநில தலைவர் தங்கராஜன் மாநில பொருளாளர் சுயம்பு லிங்கம் ஆகியோர் முன்னிலையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமித்திட கூடுதல் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் .இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் புழல் கிராம அலுவலர் செந்தில்குமார் , வடபெரும்பாக்கம் அலுவலர் லெனின் உள்பட திருவெற்றியூர் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *