தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருடா வருடம் மழை நீர் தேங்கி பள்ளி நடத்தாத சூழல் பல வருடங்களாக ஏற்பட்டு வருகிறது அதன் காரணமாக அருகில் உள்ள கால்வாயில் மழை தண்ணீர் தேங்குவது தொடர்பாக முன் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்தியா அவர்களால் கள ஆய்வு மேற்கொண்டனர் இதில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அகரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் உதவியாளர் குமரேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்