அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி புதன்கிழமையான இன்று (23.10.2024) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 14 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.