அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம் எல் ஏ வெங்கடேசன் வழங்கினார்


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கு விழா நடைபெற்றது இந்த விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை தலைமை தாங்கினார் துணை தலைமை ஆசிரியர்
மரியஜோசப்ராஜ்,
வரவேற்றார் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், நகர செயலாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவைத் தலைவர் இடையபட்டி நடராஜன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன், ஒப்பந்ததாரர் பரந்தாமன், மற்றும் டாக்டர் கோகுல் கோவிந்தராஜ், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் நாகரத்தினம், பள்ளியின் மேலாண்மை குழு துணைத் தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதிஷ், மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், நகர இளைஞரணி வெங்கடேஷ், பொறியாளர் அணி ராகுல், பாலகிருஷ்ணன், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், முடிவில் தேசிய மாணவர் படை ஆசிரியர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *