பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து கூலி தொழிலாளி 2 பேர் பலி – குண்டடத்தில் சோகம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வேங்கிபாளையம் புறவழிச் சாலையில் பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2,பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குண்டடம் பகுதியில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கூலி தொழிலாளர்கள் இரண்டு பேருடன் கொடுவாய் தனியார் ரோடு போடும் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராத விதமாக வேங்கி பாளையம் என்ற இடத்தில் பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது இதில் சிமெண்ட் மூட்டை மேல் அமர்ந்திருந்த தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், கருத்து கண்ணு மகன் பாண்டியன் வயது 67. அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் மகன் ஜெயக்குமார் வயது 42, ஆகியோர் சாலையில் தூக்கி வீசி எறியப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் ஒருவரை தாராபுரம் அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையில் பலன் இன்றி சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த நிலையில் போடிநாயக்கனூர் குணசேகரன் மகன் காமேஸ்வரன் வயது 26 பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மகன் ஜெகதீஷ் வயது 25 வாகனத்தின் உட்பகுதியில் அமர்ந்திருந்தார். வாகனம் விபத்துக்குள்ளான போது இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன இதனை அடுத்து அவர்களும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கு உண்டான காரணங்கள் குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *