தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டி வருகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலணியில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 700 -வது மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சங்கரன் கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டினர். விழாவில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், துணை பொருளாளர் மாரியப்பன், திமுக நகர துணை செயலாளர் முத்துக்குமார் மற்றும் ஆறுமுகம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *