கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகாவில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா ராஜகிரி ஊராட்சி, காமராஜர் தெரு, நாணல் காடு தெரு, இளங்காரக்குடி கார்த்திகைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் பட்டியலின மக்கள் ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் ,
சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி விடுதலை தமிழ் புலிகள் கட்சி கட்சி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
தை. சேகர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் சுரேஷ், ராஜா, தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ,ரமிளா தமிழ் மாறன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த்,, தஞ்சை மைய மாவட்ட செயலாளர் சேவியர், திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ், கும்பகோணம் மாநகர மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் வில்லியம்ஸ், மாநகர மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் முரளி, துரை .பிரபு, திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் திருமேனி, மாநகர மாவட்ட பொருளாளர் அலெக்ஸ், மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர்கள் பெட்ரிக்பிரபு,
இளையபெருமாள், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ்மாறன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் முருகராஜ், தமிழ் புலிகள் பாசறை மாவட்ட அமைப்பாளர் கௌதமன், உலர் உரிமை இயக்க பொறுப்பாளர் கோவிந்தசாமி, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீராம் மற்றும் கிராமவாசிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத் தனி வட்டாட்சியர் முருககுமார் தலைமையிலும் , துணை வட்டாட்சியர் தமயந்தி, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன், வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராஜகிரி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தினை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து தகுதியான நபர்களுக்குள் இரண்டு மாத காலத்திற்குள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *