கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் நலன் கருதி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு கல்யாணசுந்தரம் வழிகாட்டுதலின்படி தொடர் மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களின் நலன் கருதி நிலவேம்பு குடிநீரை மாவட்டத் துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என் .நாசர், பாபநாசம் பேரூர் கழக செயலாளர் ச.கபிலன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் துரைமுருகன், கலியமூர்த்தி ,மாவட்ட பிரதிநிதி கே.கே. அறிவழகன், நகரத் துணைச் செயலாளர் சின்ன உதயா, பாவை அனிபா,தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன் ,
மணிமாறன், கோபி மற்றும்
நிர்வாகிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *