பத்தாம் ஆண்டு மாபெரும் புத்தகக் கண்காட்சி இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருவாரூர் தெற்கு வீதி ஆர்டிஓ ஆபீஸ் எதிரில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அமைப்பின் சார்பாக 10-ம் ஆண்டு மாபெரும் புத்தக கண்காட்சி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா முன்னிலை வகித்தார்.

கண்காட்சியில் முதல் விற்பனையை ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா அவர்கள் வெளியிட மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சௌமியா பெற்றுக் கொண்டார். இந்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு ஒரு மாத காலம் நடைபெறுவதாக கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் மாசிலாமணி ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு திருச்சி மண்டல மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *