தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.

மேலும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 04 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8000/- வீதம் ரூ.32,000/- மதிப்பிலான பிரெய்லி கடிகாரங்களை ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்
.சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார். துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, மாவட்ட மாற்றுத்திறனாளி
கள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *