திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் அரித்துவாரமங்கலம், மாணிக்கம் மங்கலம், வீரமங்கலம், ஆதிச்ச மங்கலம், திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மத்திய, மாநில அரசுகள் நிதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 300 சதுர அடி பரப்பளவில் ரூபாய் 3.50 லட்சத்தில் 262 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் 341 வீடுகள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,

மேலவிடையல் ஊராட்சி ஆண்டாங் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும், சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் பகுதியிலும் மற்றும் தென் குவளை வேலி ஊராட்சி ஆகிய பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, பழுதடைந்த வீடுகள் புனரமைக்கும் பணி, பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமை திட்ட இயக்குனர் செந்தில் வடிவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பயனாளிகளிடம் வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட போது வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தில் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் சண்முகசுந்தரம், சுகந்தி, பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *