பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 27 ஆம் தேதி விவசாயிகள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குரைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் டிச. ‌. 27 ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *