பெரம்பலூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்க கோரியும், மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் துரை .சிவா ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரை மாவட்ட மாணவரணி எஸ் செந்தில்குமார் வழங்கினர்.
மாவட்ட பொருளாளர் என். சோழரசன் முன்னிலை வகித்தார். உடன் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.இளையராஜா , வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் துரை.சிதம்பரம், வேப்பூர் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். விஜயகுமார், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார்,மாவட்ட துணை செயலாளர் ஜோதிலட்சுமி, செயற்குழு உறுப்பினர் என் சரவணன், ஆகியோர் மற்றும் கழகப் பேச்சாளர் கருணாநிதி,பொதுக்குழு உறுப்பினர் ஜெயவேல், மீனவர் அணி செயலாளர் ஆதிமூலம், தொழிற்சங்க செயலாளர் ராஜா,பெரியசாமி. மகளிர் அணி துணை செயலாளர் திலகவதி சத்தியமூர்த்தி, மற்றும் மாவட்ட ,ஒன்றிய , கழக நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.