திண்டுக்கல் தனியார் பள்ளி, கல்லுாரியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலால் நிர்வாகத்தினர் மாணவர்களை உடனே வெளியேற்றியநிலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பழநி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி 2 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் ஒரே முகவரியிலிருந்து மர்ம நபர்கள் அனுப்பினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் உடனடியாக இந்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து உடனே அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

எஸ்.பி., பிரதீப் தலைமையிலான கியூ பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் போலீசார் செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி 2 இடங்களிலும் மாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித வெடிகுண்டு சந்தேகப்படும் படியான பொருட்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. அந்த இமெயில் இரண்டும் ஒரே நபரின் அட்ரஸை கொண்டுள்ளதால் போலீசார் எதிர்திசையில் உள்ள நபர் யார் என்பதை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *