UGC 2025 வரைவறிக்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி பேராசிரியர்கள் வாயிற் முழக்க ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு வாயிற்முழக்க ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் UGC 2025 ன் படி கல்லூரி  பேராசிரியர்களை தேர்வு செய்வதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் எனவும், UGC 2025 வரைவறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது.

மேலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தபட்டது. இந்த கோரிக்கையினை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *