கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்: 9842427520.11-04-2025.


பல்லடம் அருகே நீச்சல் அடிக்கச் சென்ற போது ஏற்பட்ட விபரீத சம்பவம்……
19 வயது தனியார் கல்லூரி மாணவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு-போலீசார் விசாரணை…….

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கேத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவரது மகன் சஞ்சய் 19. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று இவர் தனது நண்பர்களுடன் ஜல்லிப்பட்டி அருகே சின்ன புத்தூர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சஞ்சய் தனது நண்பர்களுடன் தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீருக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது நண்பர்கள் சஞ்சயை தேடி பார்த்த போது அவர் நீருக்குள் மூழ்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சஞ்சையை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சஞ்சயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *