தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்வியாண்டு தொடக்கம் – மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு வகுப்புகளில் சேர்க்கை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று (ஜூன் 16) புதிய கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கின. முதலாம் ஆண்டு படிப்பு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று முதல் நாள் வகுப்பிற்கு சமூகமளித்தனர்.

கல்லூரிகளின் வளாகங்களில் உற்சாகமான மற்றும் பரபரப்பான தோற்றம் காணப்பட்டது. மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள், வழிகாட்டல் கூட்டங்கள், கல்வி மற்றும் ஒழுக்கக்கூறுகள் குறித்து அறிமுகங்கள் ஆகியவை நடத்தப்பட்டன. மேலும், பல கல்லூரிகளில் முதற்கட்ட விளக்க வகுப்புகள் நடத்தப்பட்டன.

புதிய மாணவர்களுக்கு கல்வி பயணத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் வழிகாட்டியதுடன், பெற்றோர்களும் குழந்தைகளை அழைத்து வந்து வாழ்த்தி ஊக்கமளித்தனர். இந்த புதிய கல்வியாண்டில் மாணவர்கள் திறமையாக கற்றுத் திகழ வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *