திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள திப்பிராஜபுரம் வடக்கு தெருவில் கடந்த 7 தினங்களாக ஸ்ரீ மத்பாகவத ஸப்தாகம் பாராயணம் முடித்து விட்டு, வருகிற 2- ந்தேதி வலங்கைமானில் உள்ள ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், இவ்வாலயத்திற்கு பூஜ்ய ஶ்ரீ மகாதேவ தீர்த்த ஸ்வாமிகள், ஆங்கரை பிரம்மஸ்ரீ ரெங்கசாமி தீக்ஷிதர் ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை ஆலயத்தின் அறங்காவலர் ஆர். சிவராமகிருஷ்ணன், ஸ்ரீ வைத்தீஸ்வரர் நற்பணி மன்ற கெளரவ ஆலோசகர் மாஸ்டர் எஸ்.ஜெயபால், செயலாளர் ஆர். ஜி.பாலகிருஷ்ணன், ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ ஏ.குமார் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் வரவேற்றனர், அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டு ஆலோசனை கூறினார். பின்னர் சுவாமிகளை தரிசனம் செய்து புறப்பட்டனர்.