தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி,திண்டுக்கல், ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 450 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வியாபாரிகளால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8ஆயிரத்து 809ம், குறைந்தபட்சவிலையாக ரூ.6ஆயிரத்து 450க்கும், சராசரி விலையாக ரூ 7ஆயிரத்து 450ற்கும் பருத்தி விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 5ஆயிரத்து 380மூட்டைகள் , குவிண்டால் ஆயிரத்து 772.11 மதிப்பில்,ரூபாய் 1கோடியே 28லட்சத்து6 ஆயிரத்து22க்கு ஏலம் போனது.

16 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *