வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர்,புதுச்சேரி
புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘சாதிப்போம் சதம் பெறுவோம்’ நிகழ்ச்சி வில்லியனூர் ராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 9வது ஆண்டு சாதிப்போம் சதம் பெறுவோம் நிகழ்ச்சியை கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் தலைமையேற்று நடத்தினார்.
கூட்டமைப்பு துணை தலைவர் முருகையன், இணை செயலாளர் சம்பத், பொருளாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராம.சிவராஜன் வரவேற்புரை ஆற்றினார். பயிற்சி வகுப்பு குத்துவிளக்கேற்றி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்ட கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் உலகரட்சகதாஸ் மாணவ மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்தினார்.
சு.பில்ராம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆறுமுகம் தமிழ் பாடமும், வழுதாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமுருகன் கணிதமும், எறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மோகனமுருகன் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடமும், தென்கோடிபாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏழுமலை தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடமும், அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் சமூக அறிவியல் பாடமும் நடத்தினர்.
எல்.இ.டி திரையில் ஸ்மார்ட் வகுப்பு மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 905 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது.