புதுவை நெட்டப்பாக்கம் திரு சத்தி நகரில் பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு தலைமையில் நடந்தது நெட்டப்பாக்கம் திரு சக்தி நகரில் நீண்ட காலமாக மக்கள் பாலம் வசதியின்றி வாய்க்காலை கடந்து வந்தனர். இதனை அறிந்த நெட்டப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு இதற்கான பணியில் ஈடுபட்டார்.

அதனை எடுத்து இன்று திருசக்தி நகரில் பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு சூடம் ஏற்றி செங்கல் எடுத்து கொடுத்து 31 லட்சம் மதிப்பிலான பணியை தொடக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உதவி பொறியாளர் செல்வராசு இளநிலை பொறியாளர் முருகன் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *