அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் புதுவை இளங்கோ நகரில் தனியார் ஓட்டலில் நடந்தது. அமைப்பு செயலாளர் யூசி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

புதுவை மாநில கழக செயலாளர் மேற்கு எஸ்டி சேகர், மாநில கழக செயலாளர் கிழக்கு முருகன், மாநில பொருளாளர் டாக்டர் வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோழமைக் கட்சிகளுக்கு அதன் வேட்பாளர்களுக்கு சிறப்பான முறையில் களப்பணி ஆற்றி வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறுகிய நாட்களே இருப்பதால் இரவு பகல் பாராமல் கண் துஞ்சாமல் விழிப்புடன் இருந்து, களம் நின்று வெற்றிக் கனி பறிக்க அனைவரும் சிறப்பாக செயல்படுவது என்று உறுதி ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில இணை செயலாளர் லாவண்யா, மாநில மகளிர் அணி செயலாளர் காமாட்சி, புஷ்பா உட்பட அனைத்து பிரிவு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *