மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் அவர்கள் முத் தியால் பேட்டையில்புதிய ராதா தட்டச்சு பயிலகத்தை திறந்து வைத்தார்.

புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் முன்னாள் மாநில பொது செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் ராதா டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் என்கிற புதிய தட்டச்சு பயிலகத்தை ஆரம்பித்துள்ளார். அதனை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் அவர்கள் திறந்து வைத்தார். RLV அவர்களை பயிலகத்தின் உரிமையாளர் ராதா மற்றும் அவரது மனைவி சாந்தா , மகன் தினேஷ் மற்றும் மீனாட்சி ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு பயிற்சி சேரவேண்டும் என்றால் கட்டணத்தில் 40 சதவிகித தொகை கட்டினால் போதும் , மீதி தொகையை RLV ஜனநாயக பேரவையின் சார்பாக செலுத்தப்படும் என்கிற புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்து , பயிலகத்தின் பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.

இந்த திட்டம் ஏற்கனவே உழவர்கரை தொகுதி ஜவகர் நகரில் செயல் படுத்தப்பட்ட திட்டம் என்பதும் , திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் இது போன்று ராதாகிருஷ்ணன் தட்டச்சு பயிலகத்தை 40 ஆண்டு காலமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயிலகத்தில் சுருக்கெழுத்தும் (short hand class) கற்று தரப்படுகிறது.

சுருக்கெழுத்து (short hand ) பரீட்சை எழுதுபவர்களுக்கு படிக்க தேவையான புத்தகங்கள் அடக்க விலையில் விற்கப்படுவது , படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் உதவி செளாளர் ஆண்டாள் , RLV ஜனநாயக பேரவையின் மாநில அமைப்பாளர் திரு. சிவகுமரன் , கோமதி, கௌரி , முதலியார்பேட்டை தொகுதி அமைப்பாளர் சுப்ரமணியன், உருளையன்பேட்டை தொகுதி அமைப்பாளர் பிரகாஷ், உப்பளம் தொகுதி அமைப்பாளர் கிஷ்டா, மாநில மகளிர் அணி அமைப்பாளர் மீனாட்சி கணேஷ் , பீட்டர், வேலு, நித்த்தியன், ராஜேஷ், ,அருண், சுதாகர், தண்டபாணி மற்றும் எராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *