வலங்கைமானில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவிதியில் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய பாஜக தலைவர் சுவாமிநாதன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராஜு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், 29-வது பூத் தலைவர் ராஜேந்திரன், 30-வது பூத் தலைவர் தங்க பாண்டியன், சுரேஷ், சேகர், ஆட்டோ அரவிந்தன், ஒன்றிய செயலாளர்அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *