புதுச்சேரி உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு, voice for Voiceless சார்பாக முதலியார்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தில், இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

சட்ட மன்ற உறுப்பினர் சம்பத் முன்னிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் புதுவை தலைவர் திரு. வேலுசாமி தலைமையில், voice for voiceless யின் அகில இந்திய தலைவர் அசோக் ராஜ் ஒருங்கிணைப்பில் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு பலர் தங்கள் செல்ல பிராணியை அழைத்து வந்து தடுப்பு ஊசி போட்டு கொண்டனர்.

மேலும் வீடு இல்லா நாய்களுக்கு ஒளி வீசும் நாடாவையும் அணிவித்தனர். நிகழ்வில் வீடு இல்லா நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் சார்பாக voice for voiceless யின் முதலியார்பேட்டை தொகுதி பொறுப்பாளர் திருமதி. கஸ்தூரி கோரிக்கைகள் அடங்கிய மனுவை சட்ட மன்ற உறுப்பினரிடம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் விலங்கு நல ஆர்வலர் திரு. செல்வம், voice for voiceless யின் பாகூர் தொகுதி பொறுப்பாளர் சுதா மற்றும் தன்னார்வலர்கள் சிவா, கெளதம், தினேஷ், வெங்கடேஷ், பிரேம், பிரவீன், வருண் மற்றும் திரலான விலங்கு நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *