உலக முதியோர் தினம்! ஹெல்ப்பேஜ் இந்தியா நிறுவனம் மற்றும் புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு சார்பாக நடந்தது!

செய்தியாளர்.ச.முருகவேல் நெட்டப்பாக்கம்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஹெல்பேஜ் இந்தியா நிறுவனம் மற்றும் புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு சார்பில் உலக முதியோர் தினம் கரியமாணிக்கத்தில் தனியார் மண்டபத்தில் நடந்தது.

ஹெல்பேஜ் இந்தியா இயக்குநர் வேணுகோபால் ராமலிங்கம் வரவேற்று பேசினார். புதுவை அரசு சமூக நலத்துறை இயக்குநர் குமரன் தலைமைதாங்கி பேசினார். புதுவை பாண்கேர் செயலர்ஶ்ரீதரன், சமூகநலத் துறை களஅலுவலர் ஆறுமுகம், கரியமாணிக்கம் தனியார் பள்ளி சேர்மென் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுச்சேரி முதியோர் நல கூட்டமைப்பு தலைவர் தனலட்சுமி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் சதாசிவம், பு.மு.சு.உ.கு. அடக்கவிலை மைய செயலாளர் ராமதாஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முதியோர்களுக்கான விளையாட்டு, பாட்டு, நடனம்,மாறுவேடப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தனியார் பள்ளி மாணவிகளின் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாகூர், வில்லியனூர், நெட்டப்பாக்கம் கொம்யூனைச் சேர்ந்த முதியோர் குழுவைச்சேர்ந்த 500−க்கும் மேற்பட்டோர்,மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் தயாநிதி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *