புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா மனிதநேய மக்கள் சேவை இயக்க தலைமை அலுவலகத்தில்( அய்யனார் நகர் ) அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அன்னாரின் திருவுருவப்படத்திற்கு உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது…..

மேலும் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், பிரமுகர்களும், இளைஞர்களும், மகளிர்களும் என பலர் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *