சேலம்
செய்தியாளர் : லிங்கானந்த்

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாமகவில் இணைத்துக் கொண்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி உட்பட்ட ஆலச்சம்பாளையம், கோணபைப் மற்றும் மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளிலிருந்து திமுக , அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய மாற்றுக் கட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகி சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் முன்னிலையிலும் , எடப்பாடி நகரச் செயலாளர் கே.பி.எம்.சண்முகம் தலைமையில் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து எடப்பாடி நகரம் மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திமுக , அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து பாமகவில் இணைந்து வண்ணமாக உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *