புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பாரதி பொற்பதக்கம்
மூத்த வழக்கறிஞர் சி. பி. திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுவதாக புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து அறிவிப்பு….

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டம் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமையில் நடைபெற்றது. செயலர் சீனு. மோகன்தாசு அனைவரையும் வரவேற்று நோக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பாரதி பொற்பதக்கம் *மேனாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான திரு சி. பி. திருநாவுக்கரசு அவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்களின் திருக்கரங்களால் வழங்குவது என்று ஆட்சி குழுவில் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு, புதுவைத் தமிழ் சங்கத்தில் வருகின்ற 28.12.2024 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் மகாகவி பாரதி பிறந்தநாள் விழாவில் பொற்பதக்கம் (ஒரு சவரன்) மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.


சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பாராட்டுரை வழங்கவும், சட்டமன்ற, நாடாளுமன்ற, தமிழ் அறிஞர்கள், வாழ்த்துரை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம்.. தீந்தமிழ் தென்றல் தி. கோவிந்தராசு தலைமையில் கவியரங்கம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. ஆட்சி குழு கூட்டத்தில் பொருளர் மு. அருள்செல்வம், துணைத் தலைவர்கள் தமிழ்மாமணி ந. ஆதிகேசவன், பாவலர் ப .திருநாவுக்கரசு, துணைச் செயலர் தெ .தினகரன், ஆட்சி குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ .உசேன், கலைமாமணி எம். எஸ் .ராஜா, பொறிஞர் மு. சுரேஷ் குமார், அ.சிவேந்திரன், கவிஞர் இரா. ஆனந்தராசன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *